தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டையில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய இருந்த ஒன்றியக் குழு ஆய்வு ஒத்திவைப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய இருந்த ஒன்றியக் குழு ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லா மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தது இதனால் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தொடர்ந்து நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசு சார்பில் 3 குழுக்கள் இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்தது. பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் ஒன்றிய குழு. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வர திட்டமிட்டிருந்தது. கந்தர்வகோட்டையிலிருந்து ஒன்றிய குழுவினர் ஆய்வை தொடங்க இருந்தனர்.

Advertisement

கல்லாக்கோட்டை, குலத்துநாயகர்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய இருந்தனர். இந்த நிலையில், திருச்சியில் இன்று ஆய்வு குழு ஆய்வை தொடங்க இருந்த நிலையில் மதிய வேலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தர இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒன்றிய குழுவில் உள்ள 3வது குழு புதுக்கோட்டைக்கு வருகை தர இருந்தனர். இந்த குழு நாமக்கல் மாவட்டத்திற்கு செல்வதால் இன்று திட்டமிட்டபடி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள முடியாது. இன்று திட்டமிட்ட ஆய்வு பணிகள் அனைத்தும் நாளைய தினம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

Advertisement

Related News