தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டை, கவிநாட்டுக் கண்மாய் வரத்து கால்வாயில் கி.பி 6ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை, கவிநாட்டுக் கண்மாய் வரத்துக் கால்வாய் தூர்வாரும் பணிகளின் போது, கி.பி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கல்வெட்டுப் பலகைத் தூண் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கவிநாட்டுக்கண்மாய் மற்றும் அதன் வரத்துவாரிகளைக் இரு மாதங்களாக தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement

இந்தத் தூர்வாரும் பணிகளின் போது சேந்தமங்கலம் அணையிலிருந்து கவிநாட்டுக் கண்மாய்க்கு நீர் வரும் வரத்துக்கால்வாயில் மேலபழுவஞ்சிக் கிராமத்திற்குத் தெற்கே எழுத்துப் பொறிப்புடன் கூடிய கற்பலகை ஒன்று இருப்பதாக இப்பணிகளை ஒருங்கிணைத்து வரும் நிமல்ராகவன் தகவல் அளித்தார்.

தகவலறிந்த சென்ற சுதர்சன் கல்லூரி துணை முதல்வர். முத்தழகன் மற்றும் வரலாற்று ஆர்வலர் க.நாராயணமூர்த்தி குழுவினர் ஆய்வு செய்ததில், கல்வெட்டானது கி.பி 6ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் முத்தழகன் கூறுகையில்,இந்தக் கல்வெட்டானது 4 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட கற்பலகையில், ஒன்றரை அடிக்கு, ஒரு அடி செவ்வகமாக செதுக்கப்பட்டு, ‘ஸ்ரீ அலரிகூந்’ என்று பொறிக்கபட்டுள்ளது, இதனை ஸ்ரீ அலரிகூன் எனப் பொருள் கொள்ளலாம். கல்வெட்டின் உள்ள எழுத்துக்களின் வடிவமைப்பை கொண்டு இந்த கல்வெட்டானது கி.பி 6ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

கவிநாட்டு கண்மாயில் உள்ள கி.பி 8ஆம் நூற்றாண்டை மாறன்சடையன் கால மடைக் கல்வெட்டே இதுவரை பழமையானதாகக் கருதிவந்த நிலையில், இந்தக் கல்வெட்டானது கண்மாயின் வரலாற்றை, மேலும் இரு நூற்றாண்டுகள் பழமைமிக்கதாக மாற்றியுள்ளது.

கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அலரிகூன் என்பவர் இப்பகுதி ஆண்ட குறுநிலதலைவராக இருக்கலாம். அவர் சேந்தமங்கலம் அணை அல்லது இந்த வரத்துக்கால்வாயை வெட்டி தெற்கு வெள்ளாற்றில் இருந்து கவிநாட்டுக் கண்மாய்க்கு நீர்வரத்தை உருவாக்கி தந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

ஏனெனில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆரியூர், அன்னவாசல், ஒடுக்கூர் பெரியகுளங்களில் இது போன்று பெயர் பொறித்த கல்தூண்களை நாம் காணமுடிகிறது. கிட்டத்தட்ட 1118 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்நிலையான கவிநாட்டு கண்மாயானது சுமார் 1400 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருவது இக்கல்வெட்டு மூலம் உறுதிசெய்யபட்டுள்ளது என்றார்.

Advertisement

Related News