தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டை அருகே வெள்ள தடுப்பு பணியின்போது குளம் தடுப்பு சுவர் உடைப்பு

*சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

Advertisement

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ள கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், குமாரகிரி ஊராட்சியில் உள்ள பெரியபிராட்டிகுளம் மற்றும் அதன் அருகிலும் முன்னெச்சரிக்கை பணிகள் நடந்துள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பணியில் குளத்தின் தண்ணீர் வெளியேறும் பகுதியில் தண்ணீரை தேக்கி வைக்கும் தடுப்பு சுவரும் உடைக்கப்பட்டுள்ளது.

இது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெரியபிராட்டி குளத்தில் மழைகாலங்களில் தேக்கி வைக்கும் தண்ணீர் புதுக்கோட்டை, கூட்டாம்புளி, சிறுபாடு, சவேரியார்புரம், சிலுவைபுரம், திருமலையாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிக்கு நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

வெள்ள காலங்களில் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்ற அக்கறையுடம் செய்துள்ள இந்த பணியால், குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் போவது மட்டுமில்லாமல், அத்தனை தண்ணீரும் வெளியேறும் போது ஆக்கிரமிப்பு நிறைந்துள்ள வடிகால்களில் வெளியேற முடியாமல் புதுக்கோட்டை - கூட்டாம்புளி சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தை முடக்கும் நிலை ஏற்படும்.

தடுப்பு சுவர் உயரமாக இருக்கும்போதே கடந்த சில ஆண்டுகளாக அந்த சாலையில் போக்குவரத்தை முடக்கும் அளவிற்கு தண்ணீர் தேங்கியிருந்து. தடுப்பு சுவர் உடைக்கப்பட்ட பிறகு அதிக அளவில் தண்ணீர் வெளியேறும், முறையான வடிகால் இல்லாத நிலையில் மக்களுக்கு பெரிய அளவில் இடையூறாக இருக்கும்.

இதற்கெல்லாம் மேலாக சுற்றுவட்டார பகுதி மக்களின் நீர் ஆதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு உடைத்துள்ள சுவரை மீண்டு கட்ட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Advertisement

Related News