புதுகையில் போலி ஆவணம் மூலம் 140 ஏக்கர் அரசு நிலம் முறைகேடாக பதிவு: ஆதாரத்துடன் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்ற மக்கள்
Advertisement
இந்நிலையில் இதனை அறிந்த புதுநிலைவயல் கிராமத்தை சேர்ந்த சிலர், கே.புதுப்பட்டியில் உள்ள கீழநிலை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ஆவணங்களுடன் நேற்று சென்று, அரசு நிலம் எதன் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்ததில் அரசு நிலம் உரிய ஆவணம் இன்றி பத்திரப்பதிவு செய்துள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரியவந்தது. இதனால் முறைகேடான ஆவணங்கள் மூலம் தனிநபருக்கு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Advertisement