தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜூன் 29ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சாராயக் கடைகள் ஏலம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு

Advertisement

புதுச்சேரி: ஜூன் 29-ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சாராயக் கடைகள் ஏலம் நடைபெற உள்ளது.

புதுச்சேரி அரசு கலால்துறை மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ 1000 கோடி வருவாய் கிடைக்கிறது.‌ இதில் ரூ. 100 கோடி கள்ளுக்கடை, சாராயக்கடை மூலம் கிடைக்கிறது. கடந்த காலங்களில் சாராயக் கடைகள், கள்ளுக்கடைகள் அதிக அளவில் புதுச்சேரி, காரைக்காலில் இருந்தன. தற்போது சாராயத்தின் விலைக்கே மதுபானங்களும் கிடைப்பதால் கடைகள் எண்ணிக்கை குறைந்தது.‌ தற்போது புதுச்சேரியில் 85, காரைக்காலில் 25 சாராயக் கடைகளும் உள்ளன. புதுச்சேரியில் 66 கள்ளுக்கடைகளும், காரைக்காலில் 26 கள்ளுக் கடைகளும் உள்ளன. சாராய, கள்ளுக்கடைகளுக்கான ஏலம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையாக நடைபெறும்.

நடப்பு ஆண்டில் ஜூலை 1ந் தேதி முதல் புதிய ஏலத்தில் கடைகள் எடுக்கப்பட்டு இயங்க வேண்டும். இதற்கான கோப்பு கலால்துறை மூலம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.‌ ஆனால் கோப்புக்கு கவர்னர் அனுமதி தரவில்லை, இதனால் சாராயம், கள்ளுக்கடைகள் ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து முதல அமைச்சர் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இந்த நிலையில் கலால்துறை அனுப்பிய கோப்புக்கு கவர்னர் அனுமதி தந்துள்ளார். அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் சாராயக்கடைகள் வரும் 29 ந் தேதி ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது. இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

Advertisement