தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சேரியில் கஞ்சா, கள்ளச்சாராயம் தாராளம் பாஜ ஆதரவு எம்எல்ஏ புகாரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் பேசியதாவது: புதுச்சேரியை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. முதல்வர் அலுவலகத்தில் புரோக்கர்கள் உள்ளனர் என கூறியிருந்தேன். அதே குற்றச்சாட்டை பாஜ ஆதரவு எம்எல்ஏ அங்காளனும் கூறியுள்ளார். இந்த ஆட்சியில் எந்த நலத்திட்டமும் செயல்படுத்துவதில்லை. ஊழல்தான் அதிகம் நடைபெறுகிறது. பணம் பெறாமல், எந்த கோப்பும் வருவதில்லை. புதுச்சேரியில் கஞ்சா, கள்ளச்சாராயம் தாராளமாக நடமாடுகிறது என்று எம்எல்ஏ அங்காளன் போலீசில் புகார் தெரிவித்தார்.
Advertisement

இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியில் குறைந்த ஓட்டுகளை பெற்றுள்ளார். அதேபோல நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் குறைந்த ஓட்டுக்கள் வாங்கி உள்ளார். மக்கள் செல்வாக்கை இழந்த பிறகும், ஏன் இரண்டு பேரும் ராஜினாமா செய்யவில்லை. புதுச்சேரியில் கோயில் சொத்துக்களை அபகரிப்பது அதிகரித்து வருகிறது. இதனை பாதுகாக்க ரங்கசாமி அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News