புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட்டம்
Advertisement
இதில் புதுச்சேரி, சென்னை பிரெஞ்ச் துணை தூதர் லிசே டல்போட் பரே, புதுவை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மற்றும் உள்துறை அதிகாரிகள், பிரெஞ்ச் தூதரக அதிகாரிகள் பங்கேற்று போர் வீரர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதையொட்டி இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டு தேசியக்கொடிகள் ஒருசேர ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து, நேற்று மாலை பிரெஞ்ச் தூதரகத்தில் பிரான்ஸ் தேசிய தின விழா நடைபெற்றது. தூதரக நுழைவாயில் மற்றும் கடற்கரை சாலையில் நடந்த வண்ணமயமான விழாவில் வாணவேடிக்கை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
Advertisement