தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரான்ஸ் தேசிய தினம் கொண்டாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரான்ஸ் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த 1789ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள பஸ்தி என்ற சிறையை மக்கள் புரட்சி மூலம் தகர்த்து, மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவினர். இதன் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 14ம் தேதி பிரான்ஸ் தேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, புதுச்சேரியில் 235வது பிரான்ஸ் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவிடத்தில் முதல் மற்றும் 2ம் உலகப் போரின்போது உயிரிழந்த இந்திய மற்றும் பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.
Advertisement

இதில் புதுச்சேரி, சென்னை பிரெஞ்ச் துணை தூதர் லிசே டல்போட் பரே, புதுவை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மற்றும் உள்துறை அதிகாரிகள், பிரெஞ்ச் தூதரக அதிகாரிகள் பங்கேற்று போர் வீரர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதையொட்டி இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டு தேசியக்கொடிகள் ஒருசேர ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து, நேற்று மாலை பிரெஞ்ச் தூதரகத்தில் பிரான்ஸ் தேசிய தின விழா நடைபெற்றது. தூதரக நுழைவாயில் மற்றும் கடற்கரை சாலையில் நடந்த வண்ணமயமான விழாவில் வாணவேடிக்கை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Advertisement

Related News