தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுவை டூ பெங்களூரு, ஐதராபாத் டிச.20ம் தேதி முதல் விமான சேவை

புதுச்சேரி: புதுவையில் இருந்து பெங்களூரு, ஐதராபாத்துக்கு டிச.20ம் தேதி முதல் விமான சேவை துவங்குவதாக விமான நிலைய இயக்குனர் ராஜசேகர் ரெட்டி கூறியுள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் கடந்த 2013ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூடப்பட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்தப் பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மீண்டும் விமான சேவை செயல்பட துவங்கியது.
Advertisement

இந்த நிலையில், புதுச்சேரியிலிருந்து விமானங்களை பெங்களூரு, ஐதராபாத்துக்கு இயக்குவதை கடந்த மார்ச் 30ம் தேதியுடன் தனியார் நிறுவனம் (ஸ்பைஸ் ஜெட்) நிறுத்தியது. கடந்த ஆறு மாதங்களாக விமானங்கள் ஏதும் புதுச்சேரியில் இருந்து இயக்கப்படவில்லை.  புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை துவங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனியார் விமான நிறுவனத்துடன் (இண்டிகோ) பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து மீண்டும் விமான சேவை அடுத்து மாதம் தொடங்க உள்ளது.

அதன்படி நாள்தோறும் பெங்களூரிலிருந்து காலை 11.10 மணிக்கு விமானம் புறப்பட்டு, மதியம் 12.25 மணிக்கு புதுவைக்கு வருகிறது. பின்னர் மாலை 5.10 மணிக்கு புதுவையிலிருந்து புறப்பட்டு, மாலை 6.35 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இதேபோல் மதியம் 12.45 மணிக்கு புதுவையிலிருந்து புறப்பட்டு, மதியம் 2.30 மணிக்கு ஐதராபாத் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் மதியம் 3.05 மணிக்கு ஐதராபாத்திலிருந்து புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு புதுவைக்கு வந்தடைகிறது.

Advertisement

Related News