தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புதுச்சேரியில் இந்திய கடற்படை வீரர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி: கண்டுகளித்த முதலமைச்சர், துணைநிலை ஆளுநர்

புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்படை சார்பில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி பலரை மெய்மறக்க செய்துள்ளது. திரைப்பட இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களை இசை நிகழ்ச்சிகளை பார்த்யிருப்போம், அதில் இருந்து சற்று தனித்துவமுடைய இசை நிகழ்ச்சி ஒன்று புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது. நாட்டை பாதுகாக்கும் கடற்படையின் இசை கலைஞர்கள் அரங்கேற்றப்பட்ட இசை நிகழ்ச்சிதான் அது. சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் இந்தியக் கடற்படை சார்பில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.

கமாண்டர் சதீஷ் சாம்பியான் தலைமையிலான இந்தியக் கடற்படையை சேர்ந்த 18 இசை கலைஞர்கள் பல்வேறு இசை கருவிகளை வசித்து பலரையும் மெய்மறக்க செய்தனர். இசை நிகழ்ச்சியில் தேசிய கீதம், வந்தே மாதரம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த தமிழ் திரைப்பட பாடல்கள் உள்ளிட்ட பாடல்கள் பாடப்பட்டன. தமிழா தமிழா நாளை நாம் நாடே, ஜெய் ஹோ, சிங்கப்பெண்ணே உள்ளிட்ட 13 பாடல்கள் இசைக்கப்பட்டன. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு இசை கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.