தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சியினர் போராட்டம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். புதுச்சேரி மாநிலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் ஏற்கனவே போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஆனால் மாநில அரசு எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
Advertisement

இதையடுத்து, தற்போது இண்டியா கூட்டணியில் உள்ள, தி.மு.க., காங்கிரஸ், கம்யூ., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஒருங்கிணைந்து தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்வதாகவும் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தார்கள். இதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் தடுப்பை மீறி முன்னேறி செல்ல போராட்டக்காரர்கள் முயல்வதால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது.

Advertisement