புதுவையில் எய்ட்ஸ் நோய் பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.3,000 உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுவை: புதுவையில் எய்ட்ஸ் நோய் பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.3,000 உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடரின் போது முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள எய்ட்ஸ் நோய் பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.3,000 உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.சிகிச்சைக்கு வரும் பயண செலவுக்கு ரூ.400-லிருந்து ரூ.1000ஆக உயர்த்தப்படும். பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு உதவித் தொகை ரூ.5000 வழங்கப்படும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதிச் சடங்குக்கு நிதி ரூ.15,000 வழங்கப்படும் என அறிவித்தார்.