தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுச்சத்திரம் வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனத்துடன் தானியங்கி கருவி அமைப்பு

Advertisement

*துணை இயக்குனர் நேரில் ஆய்வு

சேந்தமங்கலம் : புதுச்சத்திரம் வட்டாரத்தில் சொட்டு நீர் பாசனத்துடன் கூடிய தானியங்கி கருவி அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுச்சத்திரம் வட்டாரம், நவணி கிராமத்தில் விவசாயி சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான 1.16 எக்டர் விவசாய நிலத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலமாக, நுண்ணீர் பாசனம் திட்டத்துடன் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த திட்டத்தின் கீழ், தானியங்கி கருவி அமைப்பதற்கு சிறு குறு விவசாயிகளுக்கு, ஒரு எக்டருக்கு ரூ.22ஆயிரம் மானியமும், இதர விவசாயிகளுக்கு ரூ.18ஆயிரம் மானியமும் வழங்கப்படுகிறது. விவசாயி சுப்பிரமணியத்திற்கு 1.16 எக்டர் பரப்பிற்கு ரூ.24 ஆயிரம் மானியமாக வழங்க விண்ணப்பம் பெறப்பட்டு, தானியங்கி கருவி நிறுவப்பட்டுள்ளது.

தானியங்கி சொட்டு நீர் பாய்ச்சுவது மிகவும் எளிமையாகவும், வேலை ஆட்கள் பற்றாக்குறையாக உள்ள தருணத்தில், மிகவும் உபயோகமாக இருக்கும். தண்ணீரின் பயன்பாடும் மிகவும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

கைப்பேசி மூலமாக எந்த இடத்திலும் இருந்து இயக்குவதற்கு மிகவும் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கவின், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Advertisement