தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவொற்றியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குவிந்த பொதுமக்கள்: 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

 

சென்னை: சென்னை, புதுக்கோட்டை உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு துறை சேவைகள் மற்றும் திட்டங்களை மக்கள் எளிதாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் சுமார் 10,000 இடங்களில் இந்த முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி சென்னை திருவொற்றியூரில் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற முகாமில் 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை தொகையை பெறுவதற்காக மட்டுமே 1,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் படிவங்களை பூர்த்தி செய்து மகிழ்ச்சியுடன் வழங்கினார்.

புதுக்கோட்டை மாநகராட்சி உட்பட்ட வடக்கு 3ம் வீதியில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கொடைக்கானல் அருகே கே.சி.பட்டி மலைக்கிராமத்தில் நடைபெற்ற முகாமில் பல ஆண்டுகளாக குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு ஒரே நாளில் குடும்ப அட்டைகளை விநியோகிக்கப்பட்டதால் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் அசைவ உணவு பரிமாறப்பட்டது.

 

Related News