தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ்1 வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து: அரசாணை வெளியீடு

 

Advertisement

சென்னை: தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின்படி இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது. மாநில அரசுக்கென தனியாக கல்விக் கொள்கை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மேனிலைக் கல்வியில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு தேவையில்லை என்றும் மாநில கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்விக் கொள்கை பரிந்துரைகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி இ ந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலார் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 1980ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி மார்ச் முதல் மாநில அளவில் பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பிறகு 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி 2017-2018ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதியும், பொதுத் பொதுத் தேர்வு தொடர்பான பதற்றம் மற்றும் மேனிலை கல்வியை மாணவர்கள் உறுதியுடன் கற்கவும், மாநிலக் கல்விக் கொள்கையை செயல்படுத்தும் வகையிலும் 2025-2026ம் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர், அரசுக்கு கடிதம் எழுதினார். இயக்குநரின் கடிதத்தை ஏற்று, பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது: அதன்படி 2025-2026ம் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான அரசுப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மேலும், 2017-2018ம் ஆண்டுக்கு முன்பு பிளஸ் 1 வகுப்புக்கு நடைமுறையில் இருந்து தேர்வை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

2025-2026ம் கல்வி ஆண்டு முதல் மேனிலை வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்று வழங்கும் முறையை மாற்றி அவர்கள் பிளஸ்2 வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய பிறகு பிளஸ்2 வகுப்பு மதிப்பெண்கள் மட்டும் உள்ளடக்கிய மதிப்பெண் சான்று வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், ஏற்கெனவே பிளஸ் 1 வகுப்பில் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது 2030 மார்ச் வரையில் தொடர்ந்து நடத்த அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசு முதன்மைச் செயலாளர் சந்தரமோகன் தனது அரசாணையில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement