தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பூட்டி வைக்கப்பட்டுள்ள கோயில் குளத்தை திறக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் பூட்டி வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் குளத்தை, புரட்டாசி மாதம் மாகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக திறந்து வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புரட்டாசி மாதம் மாகாளய அமாவாசை தினத்தில் உயிர் நீத்த முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்வது இந்துக்களின் மரபு. அந்த வகையில், புரட்டாசி மாத மாகாளய அமாவாசை நாளை (21ம்தேதி) அனுஷ்டிக்கப்படும் நிலையில், நீர்நிலைகளில் உயிர் நீத்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்க, இந்துக்கள் தயாராகி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயிலான வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தின் குளக்கரையில் பல ஆயிரக்கணக்கான இந்துக்கள் தர்ப்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். கடந்த சில வாரங்களாக கோயில் நிர்வாகம் பல்வேறு காரணங்களை கூறி, அனந்த சரஸ் குளத்தில் பக்தர்கள் யாரும் இறங்க முடியாத அளவிற்கு குளத்தின் இரும்பு கதவுகளை பூட்டு போட்டு வைத்து உள்ளது.

இதுகுறித்து கேட்கும் பக்தர்களுக்கு, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவின்பேரில் பூட்டு போட்டு உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாகாளய அமாவாசை தர்ப்பண நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அனந்த சரஸ் குளம் பூட்டு போட்டு உள்ள சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, தர்ப்பணம் செய்ய உள்ள இந்துக்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது. ஆகையால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, புரட்டாசி மாதம் மாகாளய அமாவாசை தினத்தில் அனந்த சரஸ் குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வசதியாக கோயில் திருக்குளத்தை திறந்து வைக்க கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement

Related News