தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் அளிக்கும் திருப்போரூர் சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு: பழைய இடத்திலேயே கட்டித்தர கோரிக்கை

திருப்போரூர்: தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் அளிக்கும் திருப்போரூர் சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும், பழைய கட்டிடத்தை அகற்றி அதே இடத்தில் கட்டித்தரவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தெற்கு மாடவீதியில் காவல் நிலையம் மற்றும் சார்-பதிவாளர் அலுவலகம் அருகருகே இயங்கி வருகிறது.
Advertisement

ஓஎம்ஆர் சாலையில் உள்ள திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர், படூர், தாழம்பூர், சிறுசேரி, புதுப்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், திருவிடந்தை நெம்மேலி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களின் சொத்துக்கள் தொடர்பாக விற்பனை, ஒப்பந்தம், குத்தகை, அடமானம், உயில், குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

கடந்த, 1886ம் ஆண்டு தொடங்கப்பட்ட திருப்போரூர் சார்-பதிவாளர் அலுவலகம் 137 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் அளிக்கும் சார்-பதிவாளர் அலுவலகமாக முதலிடத்தை திருப்போரூர் பிடித்துள்ளது. ஆண்டுக்கு 25 ஆயிரம் ஆவணங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு திருப்போரூர் சார்-பதிவாளர் அலுவலகத்தை மாதிரி சார்பதிவு அலுவலகமாக தரம் உயர்த்தி நவீன வசதிகளுடன் கட்ட ஒப்புதல் அளித்து, அதற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த அலுவலக கட்டிடத்தை ஆய்வு செய்தனர். கடந்த 2008ம் ஆண்டு புதிய சார்- பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால் அதை இடிக்க முடியாது என்று கூறி விட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, சார்பதிவகத்தை வேறு எங்காவது இடமாற்றம் செய்து புதிய கட்டிடம் கட்டவும் பொதுப்பணித்துறை பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக, திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் தலைமையிடமாகவும், ஒன்றிய தலைமையிடமாகவும் இது உள்ளது. இங்கு வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், கல்வித்துறை அலுவலகம், வேளாண் அலுவலகம், மின் வாரிய அலுவலகம் உள்ளிட்ட அனைத்து தலைமை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு பெயர் மாற்றங்களுக்கு வரும் பொதுமக்கள் ஒரே பகுதியில் தங்கள் வேலைகளை முடித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், திருப்போரூர் சார்-பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என இங்குள்ள வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்கள், பொதுமக்கள், அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருப்போரூரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் லிப்ட், ஏசி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய சார்-பதிவாளர் அலுவலகத்தை கட்டித்தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News