தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊட்டி படகு இல்லம் செல்லும் சாலையில் முட்புதர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Advertisement

ஊட்டி : ஊட்டி படகு இல்லம் செல்லும் சாலையில் உள்ள நடைபாதையில் ஓரத்தில் வெட்டப்பட்ட செடி கொடிகள் முறையாக அகற்றப்படாததால் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி நகரில் உள்ள சுற்றுலா தலங்களில் தாவரவியல் பூங்காவிற்கு அடுத்த படியாக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக படகு இல்லம் உள்ளது.

ஊட்டி ஏரியில் அமைந்துள்ள படகு இல்லத்தில் இருந்து படகு சவாாி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஊட்டி பஸ் நிலையம் அருகே படகு இல்லம் உள்ளதால் சில சுற்றுலா பயணிகள் நடந்தே சென்று வருவார்கள்.

இதற்காக பஸ் நிலைய பகுதியில் இருந்து படகு இல்லம் வரை நடைபாதை உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி காந்தல் செல்ல கூடிய பொதுமக்களும் பயன்படுத்துவார்கள். இந்நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே நடைபாதையின் பக்கவாட்டில் வளர்ந்திருந்த முட்புதர்கள் அண்மையில் வெட்டி அகற்றப்பட்டன.

இந்த செடிகள் முறையாக அப்புறப்படுத்தாமல் நடைபாதையிலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சாலையிலேயே நடந்து செல்ல கூடிய சூழல் நிலவுகிறது. எனவே நடைபாதையில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement