தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்த ஆத்திரத்தில் குடும்பத்தையே கொலை செய்த சிறுவனுக்கு 100 ஆண்டுகள் தண்டனை :பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி

இஸ்லாமாபாத் : பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்த ஆத்திரத்தில் தனது தாய் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்த 17 வயது சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான பாகிஸ்தானின் லாகூர் நகரைச் சேர்ந்த செய்னலி என்ற சிறுவன், கடந்த 2022ம் ஆண்டு தனது 14 வயதில் நிகழ்த்திய கொடூர சம்பவம் அந்நாட்டையே உலுக்கியது. செல்போனில் பப்ஜி விளையாடி தோல்வியுற்று அதிருப்தியில் இருந்த சிறுவனை எந்நேரமும் பப்ஜி விளையாடுவதாக கூறி அவனது தாய் திட்டியுள்ளார்.

Advertisement

இதில் ஆத்திரம் அடைந்த சிறுவன், சிறிது நேரம் கழித்து, தனது தாயின் துப்பாக்கியை கொண்டு உறக்கத்தில் இருந்த அவரை கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த 20 வயதுடைய தனது அண்ணனையும் 15 மற்றும் 10 வயதுடைய இரு சகோதரிகளையும் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் லாகூர் நீதிமன்றத்தில், நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். சிறுவன் என்பதால் வயதை காரணம் காட்டி, மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement