தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பி.ஆர்.எஸ் கட்சிக்கு நன்கொடை பெரும் சரிவு: ரூ.580 கோடியில் இருந்து ரூ.15 கோடியாக குறைந்தது

ஐதராபாத்: தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதால், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் நன்கொடை ஒரே ஆண்டில் படுவீழ்ச்சி அடைந்துள்ளது. பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சிக்கு கடந்த நிதியாண்டுகளில் கோடிக்கணக்கில் நன்கொடைகள் குவிந்தன. குறிப்பாக, 2022-23 நிதியாண்டில் ரூ.20,000க்கு மேற்பட்ட பங்களிப்புகள் மூலம் மட்டும் சுமார் ரூ.154 கோடி நன்கொடை பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2023-24 நிதியாண்டில் அக்கட்சிக்கு நன்கொடை உச்சத்தை தொட்டது.

Advertisement

அந்த ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.495.52 கோடி உட்பட, தேர்தல் அறக்கட்டளை நிதிகள் வழியாகவும் சேர்த்து மொத்தம் ரூ.580 கோடிக்கும் அதிகமாக நன்கொடை கிடைத்தது. ஹெட்டோரோ டிரக்ஸ் (ரூ.50 கோடி), எம்.எஸ்.என். பார்மாகெம் மற்றும் எம்.எஸ்.என். ஆய்வகங்கள் (ரூ.20 கோடி), டிவிஸ் ஆய்வகங்கள் (ரூ.20 கோடி) போன்ற மருந்து நிறுவனங்களும், ராஜபுஷ்பா குழுமம் மற்றும் மை ஹோம் இன்ப்ராஸ்டிரக்சர் போன்ற மனை வணிக நிறுவனங்களும் அக்கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகளவில் நன்கொடை வழங்கிய முக்கிய நிறுவனங்களாகும். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தால் தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, நடப்பு 2024-25 நிதியாண்டில் பி.ஆர்.எஸ். கட்சிக்கு வரும் நன்கொடை மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

இந்த நிதியாண்டில் இதுவரையில் அக்கட்சிக்கு வெறும் ரூ.15 கோடி மட்டுமே நன்கொடையாக கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டு கிடைத்த ரூ.580 கோடியுடன் ஒப்பிடுகையில் இது மிகக் கடுமையான வீழ்ச்சியாகும். தற்போது கிடைத்துள்ள ரூ.15 கோடி நன்கொடையில் பெரும் பகுதி தேர்தல் அறக்கட்டளை நிதிகள் வழியாகவும், மீதமுள்ள தொகை தனிநபர்கள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் இல்லாததால், பெரு நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வந்த நிதி முற்றிலுமாக நின்று போனதே இந்த திடீர் சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி, தற்போது தெலங்கானாவில் ஆட்சியை பறிகொடுத்து எதிர்கட்சியாகி உள்ளதால் நிதி கிடைப்பதில் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.

Advertisement