தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து சந்திரசேகர் ராவ் மகள் கவிதா சஸ்பெண்ட்: தெலங்கானா அரசியலில் பரபரப்பு

திருமலை: தெலங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா கட்சியின் எம்எல்சியாக உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு கவிதா மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். பின்னர் ஜாமீனில் இருந்து வெளியே வந்ததில் இருந்து அவரது சகோதரர் ராமராவுக்கும் இடையே மோதல் வெடித்தது.

Advertisement

இதனால் பிஆர்எஸ் கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து கவிதா பேச தொடங்கினார். மேலும் கட்சியின் தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். சந்திரசேகர ராவுக்கு எதிராக நடக்கும் விசாரணைக்கு கட்சி தலைவர் ஹரிஸ்ராவ் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டி உள்ளார். கவிதாவின் கருத்துகளுக்குப் பிறகு, எர்ரவல்லி பண்ணை வீட்டில் இருந்த கே.டி.ராமாராவ் மற்றும் பிற கட்சி மூத்த தலைவர்கள் கே.சந்திரசேகர் ராவுடன் நீண்ட ஆலோசனை நடத்தினர்.

எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்படியே விட்டுவிடுவது கட்சிக்கு மேலும் கெட்டபெயரை ஏற்படுத்தும் என்றும் மற்ற தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மேலும் குழப்பம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கே.சி.ஆரும் கே.டி.ஆரும் உணர்ந்தனர். இதனையடுத்து கவிதாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். இந்த முடிவை நேற்று பிற்பகல் பி.ஆர்.எஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வடிவில் வெளியிட்டது.

அதில் கவிதாவின் நடவடிக்கைகள் கட்சிக்கு விரோதமாக இருப்பதால் அவரை உடனடியாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். இது தெலங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Advertisement