தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

19 மாகாணங்கள் சார்பில் எச்-1பிக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் எதிர்த்து வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல்

நியூயார்க்: இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் எச்-1பி விசாக்களை இனி புதிதாக பெறுபவர்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக அதிபர் டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் உயர்த்தியது. அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து 19 மாகாண நிர்வாகங்கள் சார்பில் அமெரிக்காவின் மாசசூட்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வழக்கை நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிஷியா ஜேம்ஸ் உட்பட 19 அட்டர்னி ஜெனரல்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அட்டர்னி ஜெனரல் ஜேம்ஸ் கூறுகையில், ‘‘எச்-1பி விசாக்கள் மூலம் திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் அமெரிக்கா முழுவதும் தேவைப்படும் சமூகங்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர். தற்போது இதற்கான விசா கட்டணம் 1 லட்சம் டாலராக அதிகரிக்கப்படுவது சட்டவிரோதமான முடிவு.

இந்த நடவடிக்கை சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கும். இத்துறைகளில் அத்தியாவசிய சேவைகளை வழங்க எச்-1பி தொழிலாளர்களைச் சார்ந்துள்ள அரசு மற்றும் லாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு புதிய கட்டணம் இந்தத் திட்டத்தை அணுக முடியாததாக மாற்றிவிடும். இதனால், நியூயார்க் மக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்பது கடினமாகும். நமது குழந்தைகளின் கல்வி சீர்குலைக்கும். நமது பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும்’’ என்றார்.

 

Advertisement

Related News