தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தண்ணீர், மின்சார தட்டுப்பாடு எதிரொலி; இளைஞர்கள் போராட்டத்தால் மடகாஸ்கரில் ஆட்சி கவிழ்ப்பு: ஆட்சியாளர்கள் வீடுகள் சூறை; 22 பேர் பலி

அண்டனானரிவோ: தொடர் மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து, மடகாஸ்கர் அதிபர் தனது அரசாங்கத்தையே கலைத்துள்ளார். ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் நீண்ட காலமாக நிலவி வரும் கடுமையான மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைக் கண்டித்து, கடந்த வாரம் தலைநகர் அண்டனானரிவோவில் இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தைத் தொடங்கினர். ‘ஜென் இசட்’ மற்றும் ‘லியோ டெலஸ்டேஜ்’ (மின்வெட்டால் சலித்துவிட்டோம்) என்ற பெயர்களில் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டம், கென்யா மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற இளைஞர் போராட்டங்களை பிரதிபலித்தது.

Advertisement

அமைதியான முறையில் தொடங்கிய இந்தப் போராட்டம், நாளடைவில் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா பதவி விலகக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தினர். இந்த மோதல்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும், தலைநகர் முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகள் மற்றும் சில அரசியல்வாதிகளின் வீடுகளும் சூறையாடப்பட்டன.

இதனால், தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா, ‘அரசுப் பணியில் இருப்பவர்கள் யாரேனும் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறியிருந்தால், அதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். அடுத்த மூன்று நாட்களுக்குள் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெறும். அதுவரை தற்போதைய பிரதமர் இடைக்கால பிரதமராகத் தொடர்வார்’ என்று குறிப்பிட்டு தற்போதைய ஆட்சியை அதிபர் கலைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Advertisement

Related News