தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயப் பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து செண்பகம்பேட்டை டோல்கேட்டில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம்: வாகனங்கள் செல்ல விடாமல் தடுத்ததால் பரபரப்பு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே, விவசாயப் பயன்பாட்டு டிராக்டர்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, செண்பகம்பேட்டை டோல்கேட்டை அனைத்துக் கட்சியினர், விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே, கீழச்சிவல்பட்டியில் செண்பகம்பேட்டை டோல்கேட் உள்ளது. 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டோல்கேட்டில் இதுவரை விவசாயப் பயன்பாடு டிராக்டர்களுக்கு கட்டணம் ஏதும் வாங்கப்படுவதில்லை. நேற்று முன்தினம் அந்த வழியாக டிராக்டர் ஓட்டி வந்த நபரிடம், டோல்கேட்டை கடந்து செல்ல ரூ.260 கட்டணம் செலுத்த வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதனால் விவசாயிகள், டிராக்டர் உரிமையாளர்கள், பொதுமக்கள் டோல்கேட் முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கீழச்சீவல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Advertisement

இச்சம்பவத்தை கண்டித்து திமுக, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் டோல்கேட்டை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். டோல்கேட் வழியாக வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் மூன்று டிராக்டர்களை நிறுத்தி மறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டோல்கேட்டில் டிராக்டர்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது. இந்த இரண்டு வழி சாலையில், நான்குவழி சாலைக்கான கட்டணம் கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. டோல்கேட் அருகே சில கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்கு சலுகை கட்டணத்தையும் செயல்படுத்தவில்லை என போராட்டக்காரர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, புகாராக கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கலைந்து செல்லுமாறும் ேபாலீசார் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும், கீழச்சீவல்பட்டி காவல்நிலையத்தில், ‘டோல்கேட்டில் டிராக்டர்களை இலவசமாக அனுமதிக்க வேண்டும். இரண்டுவழிச் சாலைக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதலாக கட்டணம் வசூலித்தவர்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரளிக்கப்பட்டது.

Advertisement

Related News