தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போராட்டத்தில் ஆள் கணக்கு காட்டுவதற்காக கொளுத்தும் வெயிலில் கிராமத்தினரை நிறுத்தி வாளி வழங்கிய அதிமுகவினர்: மக்கள் ஆதரவு இல்லாததால் மாஜி அமைச்சர் அதிர்ச்சி

பேரையூர்: மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி பேரூராட்சி அழகுநாச்சியார் ஊரணி சீரமைப்பு பணி தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் ஊரணிக்கரையில் பந்தல் போட்டு நேற்று திடீர் போராட்டம் நடத்தினார். ஆனால் போராட்டம் நடத்தும் அளவுக்கு போதிய அளவில் ஆட்கள் இல்லாததால், ஆதரவாளர்களை அனுப்பி, பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் வாளி தருவதாக டி.கல்லுப்பட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் தகவல் பரப்பினார். இதையடுத்து அங்கு ஏராளமானோர் குவிந்தனர். அவர்களை ஊரணிக்குள் அழைத்து சென்று கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும்படி செய்து உதயகுமார் பிளாஸ்டிக் வாளி வழங்கினார்.

Advertisement

வாளிகளை வாங்கியவர்கள் போராட்டப் பந்தலுக்கு வராமல் வீடுகள் நோக்கி புறப்பட்டுச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த உதயகுமார், வாளி வழங்கும் பணியை பாதியிலேயே நிறுத்தினார். அங்கிருந்த பொதுமக்களுக்கு வாளிகளை வழங்காமல் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் என்ற கணக்கில் பந்தல் அருகே நீண்ட நேரம் நிறுத்தி வைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நெரிசலில் சிக்கின. இதையடுத்து வார்டு வாரியாக வந்து வாளி தருகிறோம் என்று கூறி, வெறுங்கையுடன் அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு வந்த கிராம மக்கள், உங்கள் அரசியல் நாடகத்துக்கு நாங்கள்தானா கிடைத்தோம் என கூறிய படி கடும் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.

Advertisement