தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சித்தூர் முதலாவது வார்டு அக்ரஹாரம் மயானத்தில் வசதிகளை ஏற்படுத்த முன்மொழிவுகளை தயாரிக்க வேண்டும்

*ஆணையருக்கு எம்எல்ஏ அறிவுறுத்தல்
Advertisement

சித்தூர் : சித்தூர் முதலாவது வார்டு அக்ரஹாரம் மயானத்தில் மயான வளாகம், இதர வசதிகள் ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகளை தயாரிக்க வேண்டும் என்று ஆணையருக்கு எம்எல்ஏ அறிவுறுத்தினார். சித்தூர் மாநகராட்சிக்கு உள்பட்ட முதலாவது வார்டு எம்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள மயானத்தை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்களுடன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆணையர் அருணாவுடன் எம்எல்ஏ குரஜாலா ஜெகன்மோகன் ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மயான வளாகம் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகளை தயாரிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது.

முன்னதாக அக்ரஹாரம் அரசுப் பள்ளிக்கு எம்எல்ஏ மாணவர்களின் மதிய உணவை ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு சுத்தமான மற்றும் தரமான உணவு வழங்க வேண்டும். மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, பள்ளியில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு தெரிவித்தார்.இதில் மாநகராட்சி மேயர் அமுதா மாநகராட்சி ஆணையர் அருணா, முன்னாள் எம்.எல்.சி துரை பாபு, துணை மேயர் ராஜேஷ்குமார் ரெட்டி, கார்ப்பரேட்டர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisement

Related News