தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரூ.3 கோடிக்கு சொத்து சேர்த்த போதை பொருள் பிரிவு எஸ்ஐ

சேலம்: சேலத்தில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சிறப்பு எஸ்.ஐ., வருமானத்திற்கு அதிகமாக ரூ.3கோடிக்கும் மேல் சொத்து குவித்துள்ள நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், ஓசூர் வீட்டிலிருந்து சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். சேலம் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக கிருபானந்தம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர்.

இதில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இவர், ஓசூர், சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் சொத்து மற்றும் வீடுகளை வாங்கியுள்ளதும் தெரியவந்தது. குறிப்பாக ரூ.3 கோடிக்கும் மேல் அவர் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் தெரியவந்தது. தற்போது அவர் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் வேலை செய்கிறார். இதையடுத்து சிறப்பு எஸ்.ஐ.கிருபானந்தம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்தார். நேற்று ஓசூரில் உள்ள அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான சொத்து தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு எஸ்.ஐ. ஒருவர் ரூ.3 கோடிக்கும் மேல் சொத்து குவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News