ரூ.3 கோடிக்கு சொத்து சேர்த்த போதை பொருள் பிரிவு எஸ்ஐ
இதில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இவர், ஓசூர், சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் சொத்து மற்றும் வீடுகளை வாங்கியுள்ளதும் தெரியவந்தது. குறிப்பாக ரூ.3 கோடிக்கும் மேல் அவர் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் தெரியவந்தது. தற்போது அவர் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் வேலை செய்கிறார். இதையடுத்து சிறப்பு எஸ்.ஐ.கிருபானந்தம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்தார். நேற்று ஓசூரில் உள்ள அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான சொத்து தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு எஸ்.ஐ. ஒருவர் ரூ.3 கோடிக்கும் மேல் சொத்து குவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.