தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொத்துக்களை பறிமுதல் செய்யும் ED-யின் அதிகாரம் தவறானது: உச்சநீதிமன்றம்

டெல்லி: நீதிமன்ற உத்தரவு இல்லாமல்சொத்துக்களை பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம் தவறானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வீரேந்திரா தனது சொத்துக்களை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக முடக்கி உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கு அதிகமான அதிகாரம் அதனை முறைகேடாக பயன்படுத்துவதற்கு வழிவகுப்பதாக குற்றம் சாட்டினார்.

Advertisement

சட்டமன்ற உறுப்பினர் சித்ரதுர்கா இயங்க முடியாத நிலையில், அவரது வங்கி கணக்குகள், ஆபரணங்கள், வாகனங்கள் என்று அனைத்தையும் அமலாக்கத்துறை முடக்கி வைத்திருப்பதாகவும் முகுல் ரோத்தகி வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பணபரிமாற்ற சட்டத்தில் சில தவறுகள் இருப்பதாக கூறினர். சொத்துக்கள் மீதும், அரசியல் அமைப்பு பாதுகாப்புகள் மீதும் நீதித்துறை சாராத நபர்கள் எப்படி முடிவு எடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர். இதனைத்தொடர்ந்து ஒன்றிய அரசு மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் அமலாக்கத்துறை சட்ட விதிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள மனுக்களோடு இணைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Related News