தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புரொஜெக்டரை சுத்தம் செய்து கொண்டிருந்த போது லிப்ட் தானாக இயங்கியதில் பொறியாளர் தலை நசுங்கி பலி: பிரபல வணிக வளாகத்தில் பரபரப்பு சம்பவம்; போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் புரொஜெக்டரை சுத்தம் செய்யும் போது லிப்ட் தானாக இயங்கியதில் பொறியாளர் ஒருவர் தலை நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் பிரபல வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் திரையரங்குகள் உள்ளன. இதில் 4வது திரையரங்கில் ஸ்கிரீனில் சுத்தம் செய்யும் பணி நேற்று அதிகாலை நடந்தது. இந்த பணியை பெரம்பூரை சேர்ந்த ராஜேஷ் (34) பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். 4வது ஸ்கிரீனில் ஹைட்ராலிக் லிப்ட் பழுதானதால் ராஜேஷ் மற்றும் மூத்த பொறியாளர் தனசேகர், தொழில்நுட்ப ஊழியர்கள் முருகன், டேவிட் ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

அப்போது ராஜேஷ் 25 மீட்டர் உயரத்தில் நின்று புரொஜெக்டரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதற்காக பழுதான லிப்ட்டை இறக்கி வைத்திருந்தனர். அப்போது, திடீரென லிப்ட் தானாக இயங்கி மேல் நோக்கி பாய்ந்து சென்றது. லிப்ட் பாதையின் இடையே நின்று இருந்த பொறியாளர் ராஜேஷின் தலை கட்டிடத்தின் மேல் தளத்தில் பலமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார். உடனே சக ஊழியர்கள் ராஜேஷை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு ஆய்வு செய்த டாக்டர்கள் பொறியாளர் ராஜேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜேஷ் மனைவி தேவிகா அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மூத்த பொறியாளர் தனசேகரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராஜேஷ் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு திருவிக நகர் 74வது வட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News