தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திட்டக்குடி அருகே டயர் வெடித்து மரத்தில் கார் மோதி பொறியாளர் பலி

*மனைவி படுகாயம்
Advertisement

திட்டக்குடி : கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிங்ஸ் டவர் வடக்கு சன்னதி பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் நடராஜன் (57). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பராமரிப்பு பிரிவில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இந்திரா (48). இவர்களுக்கு தேவதா (25), தரண்யா (20) என 2 மகள்கள் உள்ளனர். தேவதா பொறியியல் படிப்பு முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தரண்யா பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தரண்யாவை பெரம்பலூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் விட்டுவிட்டு நடராஜன், அவரது மனைவி இந்திரா ஆகியோர் காரில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். திட்டக்குடி இடைச்செருவாய் அருகே சென்றபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் இடது பக்க சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வலது பக்க சாலையில் இருந்த புளியமரத்தின் மீது மோதியது.

இதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மனைவி இந்திரா படுகாயங்களுடன் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தின்போது புளிய மரத்தின் அருகே மொபட்டை நிறுத்திவிட்டு செல்போன் பேசிக் கொண்டிருந்த இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மகன் பாலுசாமி என்பவருக்கும் காயம் ஏற்பட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News