தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேராசிரியை நிகிதா நகை திருட்டு புகார் கோயில் ஊழியர்கள் 35 பேரிடம் 5 மணி நேரம் சிபிஐ விசாரணை

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், பேராசிரியை நிகிதாவின் நகை திருட்டு புகார் தொடர்பான வழக்கையும் சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் மடப்புரத்துக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், நிகிதாவின் நகைகள் திருட்டு புகார் தொடர்பாக கோயில் ஊழியர்கள் சக்தீஸ்வரன், ராஜா மற்றும் அஜித்குமாரின் நண்பர்கள் உள்பட 5 பேரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 2வது நாளாக நேற்று காலை 11.30 மணிக்கு விசாரணை நடத்த 3 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் மடப்புரம் வந்தனர்.

Advertisement

இக்குழுவினர் கோயில் உதவி ஆணையர் அலுவலகம் சென்று நிரந்தர மற்றும் தற்காலிக, அவுட்சோர்சிங் பணியாளர்கள் உட்பட 35 பேரின் பெயர் பட்டியலை வாங்கினர். பின்னர் மடப்புரம் பஸ் நிலையம் சென்று, அங்கு ஆட்டோ சங்கத்தின் சார்பில் வைத்துள்ள சிசிடிவி கேமராவைப் பார்த்து அதனுடைய புட்டேஜை பார்க்க வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு ஆட்டோ சங்கத்தினர் இந்த சிசிடிவி 12 நாட்கள் வரை மட்டுமே பதிவு இருக்கும். பின்னர் தானாகவே அழிந்துவிடும் என்றனர். அதனை தொடர்ந்து கோயில் ஊழியர்கள் 35 பேரையும் வரவழைத்து சிபிஐ போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

Advertisement

Related News