தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி துணை முதல்வர் மீது பேராசிரியை பாலியல் புகார்: காவல் நிலையத்தை மாணவர்கள் முற்றுகை

Advertisement

வேலூர்: வேலூரில் உள்ள தனியார் கல்லூரி துணை முதல்வர் மீது பேராசிரியை பாலியல் புகார் அளித்தார். துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வருபவர் அன்பழகன். அக்கல்லூரியில் பணியாற்றும் ஒரு பெண் பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் புகார் மனு அளித்தார். அதன்பேரில் வேலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு கல்லூரி துணை முதல்வர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த கல்லூரியின் துணை முதல்வர் அன்பழகன், தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் வழக்குப்பதிவு செய்து 5 நாட்கள் ஆகியும் மகளிர் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர். கல்லூரி வளாகத்தில் துணை முதல்வரை பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக கோஷமிட்டபடி சென்று அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement