தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய சட்டப் பல்கலை பேராசிரியர் பணியில் சேர்ந்த சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி

Advertisement

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தற்போது தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். கடந்த 2022 நவம்பர் 9ம் தேதி முதல் 2024 நவம்பர் 10ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், அயோத்தி நில விவகாரம், தனியுரிமை உரிமை, பாலியல் உறவுகளை குற்றமற்றதாக்குதல், சபரிமலை வழக்கு, ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர். தற்போது ஓய்வுபெற்றுள்ள அவர், தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் புரவலர் பேராசிரியராக சேர்ந்துள்ளார்.

இவரது பணியால் இந்திய சட்டக் கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. மேலும் அவர், அரசியலமைப்பு ஆய்வு மையம் என்ற ஒரு அமைப்பை நிறுவி, அதன் மூலம் சட்டக் கல்வி ஆராய்ச்சிக்கு வழிகாட்ட உள்ளார். அரசியலமைப்பில் நீதி, மாறுகின்ற அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகளில் மாறும் விளக்கம் ஆகியவை குறித்து ஆராய்ச்சி நடத்தப்படும் என்பதால், இது மாணவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.எஸ்.பாஜ்பாய் தெரிவித்தார். மேலும் இந்திய சட்டக் கல்வியை வலுப்படுத்துவதற்கும், சமூக நீதிக்கு பங்களிக்கவும் அவரது இந்த முயற்சி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News