தேசிய சட்டப் பல்கலை பேராசிரியர் பணியில் சேர்ந்த சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி
Advertisement
இவரது பணியால் இந்திய சட்டக் கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. மேலும் அவர், அரசியலமைப்பு ஆய்வு மையம் என்ற ஒரு அமைப்பை நிறுவி, அதன் மூலம் சட்டக் கல்வி ஆராய்ச்சிக்கு வழிகாட்ட உள்ளார். அரசியலமைப்பில் நீதி, மாறுகின்ற அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகளில் மாறும் விளக்கம் ஆகியவை குறித்து ஆராய்ச்சி நடத்தப்படும் என்பதால், இது மாணவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.எஸ்.பாஜ்பாய் தெரிவித்தார். மேலும் இந்திய சட்டக் கல்வியை வலுப்படுத்துவதற்கும், சமூக நீதிக்கு பங்களிக்கவும் அவரது இந்த முயற்சி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement