தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேராசிரியர் தி.இராசகோபாலன் எழுதிய ‘கலைஞரின் பேனா’ நூலை முதல்வர் வெளியிட்டார்

Advertisement

சென்னை: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நூலாசிரியர் பேராசிரியர் ராசகோபலன், முரசொலி செல்வத்தின் வகுப்பு தோழர் திராவிடர் மாணவ முன்னேற்ற கழகத்தில் இணைந்து பணியாற்றியவர். அவர் ஆண்டுதோறும் ஆழ்வார்கள் ஆய்வு மைய கூட்டங்களை சிறப்பாக நடத்துகின்ற பாங்கினை கலைஞர் பாராட்டியுள்ளார். கலைஞரின் ஆட்சித்திற ஆளுமைகள், இலக்கிய ஆளுமைகள் முதலியவற்றை குறித்து இந்நூலில் நூலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார். கலைஞர் தொண்டால் தொட்டவர்கள் உண்டு;

அவரை கலையால் தொட்டவர்கள் உண்டு; ஆனால், கலைஞருடைய பேனாவைத் தொட்டு, அவரது நெஞ்சைத் தொட்டவர் நூலாசிரியர். ‘கலைஞருடைய எழுத்துக்கள் எனக்கு பிராணவாயுவாகி போனதால், அவற்றை பதிவு பண்ணும் ஒலிப்பதிவு கருவியானேன்’ என்கிறார் நூலாசிரியர். இந்நூலில், கலைஞர் தம் வாழ்நாளில் நேரம் காலம் இல்லாமல் எழுதிக் கொண்டிருந்தார்; அதனால்தான் அவருடைய எழுத்துக்கள் நேரம் காலம் இன்றி வாழ்கின்றன என்றும், பண்டித ஜவகர்லால் நேரு, ராபர்ட் ப்ராஸ்ட்டினுடைய கவிதையை எழுதி தம் மேஜை மீது வைத்திருந்தார்.

ஆனால், கியூபாவின் அதிபர் பெடல் காஸ்ட்ரோ 20.1.2006 அன்று கலைஞர் எழுதிக் கொடுத்த கவிதையை ஸ்பானிஷ் மொழியில் மொழி பெயர்த்து தம் மேஜையின் மீது வைத்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். உலகத்து கவிஞர்களின் எழுத்துக்களோடு கலைஞரின் எழுத்துக்களை ஒப்பிட்டால், மற்றவர்களுடைய எழுத்துக்கள் மலையடிவாரத்தில் நடக்கின்றன. ஆனால், கலைஞரின் எழுத்துக்கள் மலையின் சிகரத்தில் உயர்ந்து நிற்கின்றன என்றும், கலைஞருடைய நாவும் பேனாவும் ஒரே உறையில் கிடக்கும் 2 வாள்கள்.

கலைஞர் தம்முடைய எழுத்துப்பணியை புதுச்சேரியில் இருந்து வெளிவந்த பத்திரிகையில் தொடங்கினார். அந்த முதல் கட்டுரைக்கு ‘அந்தப் பேனா’ என பெயரிட்டிருந்தார். அதனால் இந்த நூலுக்கு ‘கலைஞரின் பேனா’ என தலைப்பிடப்பட்டதாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ அன்னியூர் சிவா, இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனை குழு உறுப்பினர் சுகிசிவம், கற்பகம் புத்தகாலயத்தின் நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement