தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழகத்தின் குட்டி ஜப்பான் சிவகாசியில் பள்ளி, கல்லூரி நோட்டுகள் தயாரிப்பு படு ஸ்பீடு: 10 சதவீதம் விலை குறைய வாய்ப்பு

Advertisement

சிவகாசி: தமிழகத்தின் குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான நோட்டுகள் தயாரிக்கும் பணியில் இரவு, பகலாக தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மூலப்பபொருள் விலை குறைவால், இந்தாண்டு 10 சதவீதம் வரை விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தமிழகத்தின் குட்டி ஜப்பான் என அழைக்கப்படுகிறது. இங்கு பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத் தொழில் பிரதானமாக உள்ளது. ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள், டைரிகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், வரும் கல்வியாண்டிற்குத் தேவையான நோட்புக்குகள் தயாரிக்கும் பணி 30க்கும் மேற்பட்ட கம்பெனிகளில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். லாங்சைஸ், பிராடிக்கல், கணக்கு, இரண்டு கோடு, நான்கு கோடு, கிராப் நோட்டுகள் என பல வகைகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பலவித வண்ணங்களாலான பல்வேறு டிஸைன்களில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் நோட்டுகள் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகம் முழுவதும் பாட நோட்டுகளின் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10% விலை குறையும்

நோட்புக் தயாரிக்க ஒயிட் பேப்பர், பைண்டிங் அட்டை, பசை உள்ளிட்ட மூலப்பொருட்கள் தேவை. இவைகளின் விலையேற்றத்தால் கடந்த காலங்களில் நோட்டு புத்தகங்களின் விலை ஏறிச் சென்ற நிலையில், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் மூலப் பொருளான பேப்பர் விலை குறைந்துள்ளதால் நோட்டுபுக் விலையும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 15 சதவிகிதம் விலை குறைந்தது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 10 சதவிகிதம் விலை குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து நோட்புக் தயாரிப்பாளர்கள் கூறும்போது, ‘பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக சிவகாசியில் அச்சுத் தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பள்ளி நோட்டுகள் தரமாக இருப்பதால் தனிமவுசு உண்டு. நோட்டுகள் தயாரிக்க தேவையான காகிதம், அட்டை விலை கடந்த ஆண்டை விட குறைவாக கிடைத்தது., இதனால் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 10 சதவிகிதம் நோட் புத்தகம் விலையை குறைத்துள்ளோம்’ என்றனர்.

Advertisement

Related News