தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் மருத்துவமனை அதிகாரியுடன் நைட்ஷோ அதிமுக பிரமுகரின் மகள் கழுத்தை நெரித்துக்கொலை: பிரேதப் பரிசோதனையில் ‘திடுக்’

சேலம்: சேலம் ராமகிருஷ்ணாரோடு பகுதியை சேர்ந்தவர் பாரதி (34). திருமணமாகாதவர். இவரது தந்தை டெல்லி ஆறுமுகம். அதிமுகவை சேர்ந்த இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பிஇ பட்டதாரியான பாரதி, சங்கர் நகர் பகுதியில் டியூஷன் சென்டரில் பணியாற்றி வந்தார். அங்கேயே தங்கிக்கொள்வார். இவரது நண்பர் நாழிக்கல்பட்டியை சேர்ந்த உதயசரண் (49). இவர் தனியார் மருத்துவமனை உயர் அதிகாரி. நேற்றுமுன்தினம் நைட் ஷோ சினிமாவிற்கு பாரதியும், உதயசரணும் சென்றிருந்தனர். பின்னர் பாரதி தங்கியிருந்த அறையில் உதயசரணும் தங்கி உள்ளார்.

Advertisement

அப்போது பாரதி சிகரெட் பிடித்தபடி மயங்கிவிட்டாராம். உடனடியாக உதயசரண் தான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு பாரதியை கொண்டு சென்றார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாரதி சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பாரதியின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது மூக்கின் மீது ரத்த காயமும், நெஞ்சு பகுதியில் வீக்கமும் இருந்தது தெரியவந்தது.

இதனால் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. உதயசரணிடம் விசாரித்ததில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் தாக்கியதாகவும் கூறியுள்ளார். பாரதிக்கும், உதயசரணுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. பாரதி மது, சிகரெட் போன்றவற்றை பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர் என்றும் கூறப்படுகிறது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்து வந்ததால் பாரதியை உதயசரண் அடித்து கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement