தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசியை இலவசமாக வழங்க நடவடிக்கை: தமிழக அரசு தகவல்

சென்னை: சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசியை இலவசமாக வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுக்கொள்ள திட்டம் விரைவில் தொடங்கப்படும். பிறந்த குழந்தைகளுக்கு முதல் மாதத்தில் இருந்து 16 தவணை செலுத்தப்படும் தடுப்பூசிகளை இலவசமாக பெறலாம்.
Advertisement

தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், தனியாரை பொறுத்தவரை தற்போது ஒரு அரசாணையை பிறப்பித்துள்ளோம். அதன்படி, குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன.

தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசியை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். இவற்றுடன் பொதுமக்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்க மாட்டோம் என்று உறுதி அளித்தால் அதன் அடிப்படையில் சில மையங்கள் திறக்கப்படும். விரைவில் அறிவிப்புகள் வெளியாகும். இது முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தை போல பயன்பெற முடியும்.

அதேசமயம் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்த திட்டம் இல்லை. ஏனெனில் நாம் தடுப்பூசி அளித்தால் அதை குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருக்கும் வகையில் வசதிகள் இருப்பது அவசியம் என்று செல்வ விநாயகம் தெரிவித்தார். குழந்தைகளுக்கு தற்போது 18 வயது வரை 16 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக,

பிசிஜி - குழந்தை பிறந்தததும் அல்லது ஒரு வயதிற்குள் போட வேண்டும்.

ஹெப்பாடிட்டிஸ் பி - குழந்தை பிறந்ததும் அல்லது 24 மணி நேரத்தில் போட வேண்டும்.

ஓ.பி.வி-0 - குழந்தை பிறந்ததும் அல்லது முதல் 15 நாட்களில் போட வேண்டும்

ஓ.பி.வி 1, 2, & 3 - 6 வாரங்கள், 10 வாரங்கள், 14 வாரங்களில் போட வேண்டும்

ரோட்டா வைரஸ் - 6 வாரங்கள், 10 வாரங்கள், 14 வாரங்களில் போட வேண்டும்

ஐபிவி - 6 மற்றும் 14 வாரங்களில் தலா இரண்டு டோஸ்கள் போட வேண்டும்.

மீசில்ஸ் - 9 முதல் 12 மாதங்களுக்குள் போட வேண்டும்

ஜே.இ-1 - 9 முதல் 12 மாதங்களுக்குள் போட வேண்டும்

வைட்டமின் ஏ 1வது டோஸ் - 9 மாதங்கள் முடிந்ததும் போட வேண்டும்.

Advertisement

Related News