தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தனியார் நிறுவனங்களை சேர்ந்த 40 காவலாளிகளுக்கு சிறப்பு பயிற்சி

சென்னை துறைமுகம் உள்பட 4 துறைமுகங்களில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த 40 காவலாளிகளுக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர்(சிஐஎஸ்எப்) பயிற்சி அளித்தனர். சென்னை துறைமுகம், நியூ மங்களூர் துறைமுகம், காமராஜர் துறைமுகம், எண்ணூர், காமராஜர் துறைமுகம்,தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஆகிய 4 துறைமுகங்களில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த காவலாளிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், துறைமுகங்களில் உள்ள முக்கிய நிலையங்கள், அவற்றுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு சவால்களுக்கு உடனடியாக தீர்வு காண்பது மற்றும் அச்சுறுத்தல்களை முறியடிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40 காவலாளிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் சுனில் பாலிவால் பேசுகையில், ‘‘துறைமுகங்களின் பாதுகாப்பு மேலாண்மையின் ஒரு பகுதியாக தனியார் நிறுவனங்களை சேர்ந்த காவலாளிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது’’ என்றார். சிஐஎஸ்எப்பின் ஐஜி சரவணன்,‘‘ துறைமுகங்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தனியார் காவலாளிகளுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது ’’ என்றார்.