தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் கோயில் நிர்வாகியிடம் ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெண் அதிகாரி கைது

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு பாத்தியப்பட்ட லட்சுமி அம்மன் கோயில் குல தெய்வ கோயில் உள்ளது. இதை தனி நபர்கள் பராமரித்து வந்தனர். இதன் ஆண்டு வருமானம் ரூ.40 லட்சமாக இருந்து வருகிறது.
Advertisement

கோயிலில் நிதி மேலாண்மை முறையாக இல்லை என்பதால் இந்த கோயிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டு வர நிர்வாகிகளில் ஒருவரான ரத்தினபுரியை சேர்ந்த சுரேஷ்குமார் (52), இந்து சமய அறநிலையத் துறைக்கு மனு அளித்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றமும் இது தொடர்பாக 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சுரேஷ்குமார் மனு மீது நடவடிக்கை எடுத்து, கோயிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டு வருவதற்கு ரூ.3 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என உதவி கமிஷனர் இந்திரா (54) கேட்டுள்ளார். பேரம் பேசி முடிவாக ரூ.1.50 லட்சம் தருமாறு இந்திரா கேட்டுள்ளார்.

இதை நேற்று முன்தினம் இரவு கோவை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் அருகில் உள்ள பாரதியார் சாலையில் இந்திராவிடம் சுரேஷ்குமார் கொடுத்து உள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்திராவை கைது செய்தனர். விசாரணைக்கு பின், நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News