தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் பள்ளியில் திடீர் தீ விபத்து: திருப்போரூர் அருகே பரபரப்பு

திருப்போரூர்: திருப்போரூர் அருகே தண்டலத்தில் புதிய தனியார் சி.பி.எஸ்.இ பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கு புதிய பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட்டு நேற்று முன்தினம் பொதுமக்களிடமிருந்து குழந்தைகளுக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு சேர்க்கை நடந்தது. இதில், மொத்தம் 160 மாணவர்கள் பள்ளியில் புதியதாக சேர்ந்துள்ளனர். இதையடுத்து, நேற்று பள்ளியில் சேர்ந்த புதிய மாணவ, மாணவியர் வரவழைக்கப்பட்டு புத்தகம், சீருடைகள் வழங்கப்பட்டது. பின்னர், திறப்பு விழா கொண்டாட்டம் நடத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் மதியம் 1 மணிக்கு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Advertisement

இன்று முதல் பள்ளி வழக்கம்போல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர் ஆகியோர் இன்று பள்ளி துவங்குவதை யொட்டி அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் பள்ளியின் தரை தளத்தில் ஒரு அறையில் ஏ.சி. இயந்திரம் வெடித்து திடீரென தீ பிடித்து புகை பரவியது. இதையடுத்து மின்சாரம் அணைக்கப்பட்டு திருப்போரூர் மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அந்த அறையில் இருந்த பர்னிச்சர்கள், ஏ.சி. மெசின் மற்றும் அட்டைப்பெட்டிகள் போன்றவை மட்டும் தீயில் சேதமடைந்ததாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News