தனியார் பள்ளியில் திடீர் தீ விபத்து: திருப்போரூர் அருகே பரபரப்பு
Advertisement
இன்று முதல் பள்ளி வழக்கம்போல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர் ஆகியோர் இன்று பள்ளி துவங்குவதை யொட்டி அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் பள்ளியின் தரை தளத்தில் ஒரு அறையில் ஏ.சி. இயந்திரம் வெடித்து திடீரென தீ பிடித்து புகை பரவியது. இதையடுத்து மின்சாரம் அணைக்கப்பட்டு திருப்போரூர் மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அந்த அறையில் இருந்த பர்னிச்சர்கள், ஏ.சி. மெசின் மற்றும் அட்டைப்பெட்டிகள் போன்றவை மட்டும் தீயில் சேதமடைந்ததாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement