தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக்கல்லூரிகள்: நடவடிக்கை எடுக்க பெ.சண்முகம் வலியுறுத்தல்

சென்னை: தனியார் மருத்துவ கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் பெறும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தனியார் நடத்துகிற 22 மருத்துவக் கல்லூரிகளிலும், 4 மருத்துவ பல்கலைக்கழகங்களிலும், 2025-26ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீடு பெற்ற மாணவர்களை சில நிர்வாகங்கள், அழைத்து கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டுமென்று கட்டாயப்படுத்துகின்றன. தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களின் இம்மாதிரியான அணுகுமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கடுமையாக எச்சரித்து இருக்கிறது.

Advertisement

கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவக் கல்வி இயக்குனரகம் ஒரு சுற்றறிக்கையும் அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் அனுப்பி இருக்கிறது. இருந்த போதிலும் இந்த விதி மீறலும், பண வசூலும் தொடர்வதாக பல புகார்கள் பெற்றோர்கள் மத்தியில் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, தமிழக அரசு உடனடியாக தலையீடு செய்து இம்முறைகேட்டை தடுத்து நிறுத்துவதோடு, இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் முறையான விசாரணை நடத்தி நிர்வாகத்திடமிருந்து பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளுக்கு மாறாக, மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Related News