தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேத்தியாத்தோப்பில் அரசு பஸ்சை செல்லவிடாமல் அடாவடி செய்யும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள்

*வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Advertisement

சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியில் அடிக்கடி தனியார் பேருந்துகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், அரசு பேருந்துகள் செல்ல வழி விடாமலும் அடாவடி செய்து வருவது தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவங்களாலேயே போக்குவரத்தை சரி செய்யும் பொருட்டு சேத்தியாத்தோப்பு உட்கோட்ட டிஎஸ்பி விஜி குமார் மற்றும் போலீசார் விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு கருதி பேரி கார்டுகளை அமைத்து சரி செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பேரி கார்டுகளை தாண்டி சென்று தனியார் பேருந்து தேசிய நெடுஞ்சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நேரம் நின்றதால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் நோக்கி செல்லும் அரசு பேருந்து ஓட்டுநர் செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

நீண்ட நேரம் வேண்டுமென்றே தனியார் பேருந்து ஓட்டுனர் தேசிய நெடுஞ்சாலை நடுவே நிறுத்தியதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இச்சம்பவத்தால் பல பேருந்துகள் செல்ல முடியாமல் தவித்தன. சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியில் தனியார் பேருந்துகள் செய்யும் அடாவடித்தனங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

எனவே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், மற்ற பேருந்துகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் போவதற்கும் காரணமான தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement