தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜிலேபி, லட்டு, அல்வா என்று அசத்தல் சேலம் மத்திய சிறை கைதிகள் தயாரித்த இனிப்புகள் விற்பனை

Advertisement

சேலம் : சேலம் மத்திய சிறையில் தீபாவளி பண்டிகையையொட்டி கைதிகள் தயாரித்த இனிப்பு மற்றும் கார வகைகள் குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மத்திய சிறையில் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தண்டனை பெற்ற கைதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்குவதுடன், உள்ளேயே வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவமனைக்கு தேவையான கட்டில் செய்யும் தொழிற்சாலை நடத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் பிரட்டும் இங்கு தான் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் சிறையில் செயல்பட்டு வரும் சிறைச்சந்தை மூலமாக கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு வகைகளும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

சேலம் சிறையில் 20 கைதிகள் சமையல் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களைக் கொண்டு மிக்சர், காரசேவ், ஜிலேபி, பாதுஷா, லட்டு, அல்வா, மைசூர்பாகு ஆகியவை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிறையின் வெளிப்பகுதியில் கைதிகளுக்கான மனு எழுதும் அறையின் அருகில் இனிப்பு வகைகள் விற்பனையை சிறை கண்காணிப்பாளர் வினோத், நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘சிறைக்கைதிகளுக்கு சமையல் கலை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சான்றிதழும் பெற்றுள்ளனர். இது போன்ற பயிற்சிகள் கைதிகளின் மனஅழுத்தத்தை குறைத்து நம்பிக்கையை உருவாக்குகிறது. விடுதலையாகி வெளியே சென்றாலும் வேலைவாய்ப்பை பெற்றுத்தருகிறது.

தற்போது தீபாவளியையொட்டி கைதிகள் தயாரித்த இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வெளி மார்க்கெட்டை விட தரமானதாகவும், குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’’என்றார்.

Advertisement