தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு புதுச்சேரி கூட்டணி அரசுக்கு பாஜ எம்எல்ஏ திடீர் கெடு: ‘பட்டியலினத்தவருக்கு அமைச்சர் பதவி 15 நாளில் வழங்க வேண்டும்’

புதுச்சேரி: புதுச்சேரி அரசை கண்டித்து ஆளும் கட்சி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான (பாஜ) சாய். ஜெ. சரவணன்குமார் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தகவல் பரவியது. இதற்கிடையே நேற்று காலை சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து, மையமண்டபத்தின் நுழைவாயிலில் நிருபர்களை சந்தித்து பேசுகையில், பல்வேறு கோரிக்கைகளை மக்களுக்கு செய்வதாக வாக்குறுதியளித்துவிட்டு, பெஸ்ட் புதுச்சேரி எனக்கூறிய மோடியின் இரண்டு கண்களையும் கைகளால் குத்துகிறார்கள். 16 பேர் கொண்ட ஆளும் கட்சியின் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு இடம் அளிக்கவில்லை.

Advertisement

ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். தனிப்பட்ட காரணங்களை கூறி அவரை நீக்கியது ஏன்? மேலும் ஒரு அமைச்சர் மீது தன்னை தொந்தரவு செய்வதாக புகார் அளித்தார், அதன் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பாஜ ஆட்சிக்கு வந்தால் அனைத்து திட்டங்களும் சிறப்பாக நடைபெறும் என கூறி ஆட்சிக்கு வந்த நிலையில் எந்த திட்டமும் செய்யப்படவில்லை. அரசு சார்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மக்கள் உரிமைகள் அனைத்தும் பறிபோய் உள்ளது. பட்டியிலனத்தை சேர்ந்த 4 எம்எல்ஏக்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும். 15 நாட்களுக்குள் நிறைவேற்றித்தராவிட்டால் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவேன், என்றார்.

Advertisement