தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறைகளில் மூர்க்கத்தனம் அதிகரிப்பது முக்கிய சவால்: தடுப்பு நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

Advertisement

புதுடெல்லி: சிறைகளில் மூர்க்கத்தனம் அதிகரிப்பது முக்கியமான சவால் என சுட்டிக்காட்டியுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம், இதை சரி செய்ய அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் மாநிலங்களுக்கு வலியுறுத்தி உள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், ‘‘சிறைகளில் மூர்க்கத்தனம் அதிகரித்தல் பொதுவான ஆபத்து.

இது முக்கியமான சவாலாக மாறி வருகிறது. பல குற்றச் செயல்களுக்கு காரணமாகவும் கருதப்படுகிறது. இதுபோன்ற கைதிகள் சில சமயங்களில் வன்முறை செயல்களில் ஈடுபடலாம். சக கைதிகள், சிறை ஊழியர்கள் அல்லது வெளியில் இருந்து வரும் நபர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடலாம். எனவே, சிறைகளில் கைதிகளின் மூர்க்கத்தனத்தை குறைப்பது அவசர தேவையாக உள்ளது.

அத்தகைய நபர்களுக்கு தேவையான உளவியல் பயிற்சி அளிப்பது பொது ஒழுங்கை பாதுகாப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. மூர்க்கத்தனத்தை பரப்பும் கைதிகளை பொது கைதிகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். அவர்களுக்காக உயர் பாதுகாப்பு சிறை வளாகத்தை நிறுவுவது குறித்து பரிசீலிக்க வேண்டும். கைதிகளை வெற்றிகரமாக சமூகத்தில் மீண்டும் இணைப்பதற்கு சிறைச்சாலைகளில் மூர்க்கத்தனப் பிரச்னையை தீர்ப்பது அவசியம்’’ என கூறப்பட்டுள்ளது.

Advertisement