தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளவரசரை போல உள்ளேனா? உழைப்பவரை வீழ்த்த முடியாது: எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி

கோபி: இளவரசரை போல இருப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். கோபியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: கோபியில் இளவரசரைப் போல் இருக்கிறேன் என்று எட்பபாடி பழனிசாமி கூறியிருக்கிறார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற அடிப்படையில் 45 ஆண்டு காலம் எனது பணியை ஆற்றி வருகின்றேன்.

Advertisement

என்னை பொருத்தவரை இளவரசரை போல் என்றும் இருந்ததில்லை. எளிமையான வாழ்க்கை நடத்துபவன் நான். அப்படி இருந்த காரணத்தின் அடிப்படையில் தான் மூன்று முறை வாக்காளர்களை தேர்தல் களத்தில் சந்திக்காமலே நான் வெற்றி பெற்ற வரலாறு இந்த தொகுதியில் இருக்கிறது. நேற்று முன்தினம் தொடர்ந்து பல்வேறு சங்கங்கள் சார்பாக கடிதங்கள் என்னிடம் வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் கண்ணீர் சிந்துகின்ற அளவிற்கு கடிதங்கள் இருக்கின்றன. எனது தியாகம், உழைப்பு மற்றும் சேவையை பற்றி யாரும் கொச்சைப்படுத்தி விடக் கூடாது என்ற முறையில் கடிதங்கள் வழங்கியுள்ளனர்.

உழைப்பவரை எவராலும் வீழ்த்த இயலாது. தியாகத்திலும் சோதனையிலும் பிறந்த இயக்கம் தான் அதிமுக. அதிமுகவில் சோதனையை தகர்த்து எறிந்து சாதனை படைக்கும் காலத்தை விரைவில் பார்க்கப் போகிறோம். பல பேர் நம்மை விட்டு சென்றாலும் கவலைப்பட தேவையில்லை. நன்றி எங்கே இருக்கிறதோ அங்கு வெற்றி பெறும். நன்றியை தகர்த்தெறிய எந்த சக்தியாலும் முடியாது. சோதனை வந்தாலும் நன்றி உணர்வுடன் பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

* நகைகளை வழங்கி கட்சியை காப்பாற்றியவர் ஜெயலலிதா

‘கட்சிக்காக உழைத்த எம்ஜிஆரை யாராலும் வீழ்த்த முடியவில்லை. அதே போலத்தான் ஜெயலலிதாவும், தியாக வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, இயக்கத்தை காப்பதற்காக தனது நகை, பொருள் அனைத்தையும் 1989ல் வழங்கி இயக்கத்தை வலிமைப்படுத்தினார்’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

Advertisement

Related News