தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ரூ.34.13 கோடி வருவாய்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்து ரூ.34.13 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். இதுபற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி குறித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: மனதின் குரல் நிகழ்ச்சி பல பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் பார்வையாளர்களைச் சென்றடைகிறது. இந்த நிகழ்ச்சிக்காக தனியாக கூடுதல் செலவு இல்லாமல், ஏற்கனவே உள்ள உள் வளங்களைப் பயன்படுத்தி அகில இந்திய வானொலியால் தயாரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை ரூ.34.13 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் மோடியின் பேச்சை பலர் கேட்கிறார்கள். அதன் தேசிய மற்றும் பிராந்திய நெட்வொர்க்கில் நேரடியாக ஒலிபரப்பப்படுகிறது. பிராந்திய மொழி பதிப்புகள் உள்ளூர் மக்களைச் சென்றடைய ஒலிபரப்பப்படுகின்றன.இவ்வாறு தெரிவித்தார்.