பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை ஒட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் வாழ்த்து
டெல்லி: பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை ஒட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "எனது நண்பர் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மோடியின் பணி மகத்தானது. ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா தந்த ஆதரவுக்கு நன்றி" என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "எனது நண்பர் ஜனாதிபதி டிரம்ப், எனது 75வது பிறந்தநாளில் உங்கள் தொலைபேசி அழைப்புக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்களைப் போலவே, இந்தியா-அமெரிக்க விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன். உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான உங்கள் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்" என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.