தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு கருப்பு கொடி போராட்டம் காங்கிரசார் கைது, வீட்டுசிறை

திருச்சி: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கங்கைகொண்ட சோழபுரத்தில் கருப்புகொடி காட்ட உள்ளதாக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக பெரம்பலூரில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜீவ் காந்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி மூக்கன், மாநில செயலாளர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ஜெயபால், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Advertisement

திருச்சியில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் தலைவர்கள் ரெக்ஸ், கலை, கோவிந்தராஜன் ஆகியோர் அவரவர் வீட்டில் போலீசாரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் முரளி தலைமையில், செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, கிறிஸ்டோபர் திலக், குமரி மகாதேவன் முன்னிலையில், திருச்சி மாவட்ட காங்கிரசார், காந்தி மார்க்ெகட், மரக்கடை பகுதியில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர்.

கோட்ட தலைவர்கள் பிரியங்கா பட்டேல், வெங்கடேஷ் காந்தி, ஜெயம் கோபி, அழகர், தர்மேஷ், பகதூர்ஷா, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விஜய் பவுல், சிறுபான்மை ராணுவ பிரிவு ராஜசேகரன், அன்பு ஆறுமுகம், கிளமெண்ட் நரேஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இதனால் முன்னெச்சரிக்கையாக திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜு (பொ) தலைமையில் போலீசார், அரசனை அவரது அலுவலகத்தில் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில பொதுச்செயலாளர் ரேடியோ வெங்கடேசன், மாவட்ட செயலாளர் விஜய்ஆனந்த், அமைப்பு செயலாளர் தளபதி சுரேஷ், மாவட்ட தலைவர் குபேந்திரன், ஊடகப்பிரிவு துணைச்செயலாளர் ரியாஸ் உள்ளிட்டோர் கும்பகோணம்-சுவாமிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Related News