தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் கீழடி குறித்த வீடியோவை வெளியிட்ட திமுக: கீழடி வரலாறு ஒருநாள் நிச்சயம் வெல்லும், தமிழர் வரலாற்றை உலகமே சொல்லும் என்றும் பதிவு

சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் கீழடி குறித்த வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது. அதில் கீழடி வரலாறு ஒரு நாள் நிச்சயம் வெல்லும், தமிழர் வரலாற்றை உலகமே சொல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ள நிலையில் கீழடி குறித்து திமுக வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
Advertisement

வணக்கம்... நான் கீழடியில் வாழ்ந்த தமிழன் பேசுகிறேன். புதைந்து கிடந்த எங்கள் நாகரிகத்தை அகழ்வாராய்ச்சி மூலம் வெளிக்கொண்டு வந்தார்கள். கீழடி நாகரிகம் வெளியில் வர,வர தமிழர் நாகரிகத்தின் மற்றுமொரு தொன்மையை உலகமே அறிய தொடங்கியது. ஹரப்பா, மொஹஞ்சதாரோ போல தமிழ்நாட்டிலும் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்பதற்கு சான்றாக நம் கீழடி நாகரிகம் வெளிப்பட்டது. தமிழனின் உயர்வான நகர நாகரிகம் உலகிற்கே தெரியவந்தது.

தமிழ் எழுத்துக்களின் காலம் கிமு 300 என அனைவரும் நினைத்து இருந்த வேளையில், கிமு 600 என எங்கள் கீழடியால் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து தான் தொடங்குகிறது என்பது நிரூபணமும் ஆனது. உலகின் மூத்த நாகரிகமாக பன்னாட்டு ஆய்வகங்கள் எங்கள் கீழடியின் தொன்மத்தை அங்கீகரித்தன. இத்தனை சிறப்புகளை கொண்ட எங்கள் கீழடியில் உலகமே உற்று கவனிக்கிறது. கீழடி வரலாறு ஒரு நாள் நிச்சயம் வெல்லும். தமிழர் வரலாற்றை உலகமே சொல்லும் என வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement