தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரதமர் மோடி சீனா பயணம் உறுதி: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல்

புதுடெல்லி: சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். நேற்று அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின், ‘‘அஜித் தோவல் தொலைக்காட்சி ஒன்றில் இந்தியா-சீன உறவுகளில் புதிய ஆற்றல் மற்றும் உந்துதல், எல்லையில் அமைதி குறித்து வலியுறுத்தப்பட்டது. சீனாவில் நடைபெறும் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனாவிற்கு செல்கிறார்” என்றார்.

Advertisement

ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதிகளில் நடைபெறும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சீனாவின் நகரமான தியான்ஜினுக்கு பயணம் மேற்கொள்வதற்கான முதல் அதிகாரப்பூர்வ உறுதிபடுத்துதல் இதுவாகும்.  கவலைகள் நிவர்த்தி செய்யப்படும்: சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை திங்களன்று சந்தித்து பேசினார்.

அப்போது இந்திய தரப்பில் இந்தியாவிற்கு உரங்கள் மற்றும் அரிய பூமி கனிமங்களை வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. இதற்கு வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ இந்தியாவின் மூன்று முக்கிய கவலைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதாவது இந்தியாவின் உரங்கள், அரிய கனிமங்கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் ஆகியவற்றின் தேவைகளை சீன நிவர்த்தி செய்வதாக வாங் யீ உறுதி அளித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நட்பு, நேர்மை, பரஸ்பர நன்மை மற்றும் உள்ளடக்கிய கொள்கைகளை நிலைநிறுத்தவும், இந்தியா உட்பட அண்டை நாடுகளுடன் இணைந்து அமைதியான பாதுகாப்பான, வளமான வீட்டை கட்டியெழுப்பவும் சீனா தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement